புளியங்குடி அருகே குளத்தில் ஆண் சடலம்

புளியங்குடி, ஏப். 25: புளியங்குடி டி.என்.புதுக்குடி அருகே உள்ள சமுத்திரகுளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், எஸ்ஐ முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமுருகேசன் தலைமையில் வீரர்கள் வந்து உடலை மீட்டனர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்குமென தெரிகிறது. உடலை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: