புதுக்கோட்டை, ஏப்.25: அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளியிடம் தகாத வார்த்தைகளால் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு
அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதுக்கோட்டை போக்குவரத்து புறநகர் கிளை மேலாளரிடம் மனு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கத்தின் திருவண்ணாமலை நிர்வாகி ராஜதுரை என்பவர் திருச்சியில் இருந்து ஆரணி செல்வதற்காக புதுக்கோட்டை பதிவு கொண்ட அரசு பஸ்சில் திருச்சி பஸ் நிலையத்தில் ஏறினார். அப்போதுதான் மாற்றுத்திறனாளி என்றும் தனக்கு உரிய இருக்கை ஒதுக்கி தரும்படி கேட்டபோது அவரை தகாத வார்த்தை கூறிவிட்டு கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து ஆரணி பஸ் நிலையத்தில் கீழே தள்ளிவிட்டது குறித்து முறையிட்டு கேட்டபோது மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில்