ஊட்டி, ஏப். 24: ஊட்டி கேரட்டின் விலை படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மலை காய்கறிகள் பயிரிட்ட போதிலும், அதிகளவு உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டே பயிரிடப்படுகிறது. எப்போதும் கேரட்டிற்கு கணிசமான விலை கிடைக்கும் என்பதாலும், ஆண்டு முழுக்கு விளையும் காய்கறி மற்றும் கிராக்கியும் உள்ளதால் இதனை ஏராளமான விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்த இரு மாதங்கள் முன்வரை கேரட் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் பட்டிப்படியாக உயர்ந்து கிலோ ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.