ஊட்டி, ஏப். 24: விளையாட்டு துறையில் சாதித்த வீரர், வீராங்கனைகள் விருதுகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு பெடரேசன்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்கள், அகிம்சை வழியில் அல்லது பிற காந்திய வழியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளவர்கள் மற்றும் வீரதீரச் செயல்கள் புரிந்தவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகள் ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகிறது.