உத்தமபாளையம், ஏப்.24: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. உத்தமபாளையம் கோம்பை ரோட்டில் இயங்கும் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கல்விமாவட்ட அளவில் முதலிடம் பெற்றதுடன், வருவாய் மாவட்ட அளவிலும் நான்காம் இடத்தை பெற்று சாதனை மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.