மானாமதுரை, ஏப்.24: தேசிய திறனாய்வு தேர்வில் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ராமஜெயம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48000 ஆயிரம் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த 2018 டிசம்பர் மாதம் நடைபெற்று தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மானாமதுரை வட்டாரத்தில் 24 நடுநிலைப்பள்ளிகள் 10க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகள், 6 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.