கும்மிடிப்பூண்டி, ஏப்.24: மெதிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (53). பழ வியாபாரி. இவர் நேற்று வீட்டில் இருந்து பழ வியாபாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏழுகண்ணு மேம்பாலம் அருகே வந்தார். அவர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் வந்து ஏழுமலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.