திருப்பூர், ஏப்.23: திருப்பூர் மாநகருக்குட்பட்ட பஸ் நிலைய பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிலும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையம் அருகே, கோர்ட் ரோடும் ஊத்துக்குளி ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள மேம்பாலம், வாலிபாளையம், நொய்யலாற்றின் ஓரம், மின்மயானம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களிடம் இருந்து பைக்குகளில் வரும் மர்ம நபர்கள் சிலர் செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பயத்துடனேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.