நாமக்கல், ஏப்.23: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில், விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 1,200 விண்ணப்பங்களை மாணவிகள் வாங்கி சென்றனர். நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இளங்கலை தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியில், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து என 13 வகையான இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த பாடபிரிவுகளில் சேருவதற்கு, நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது. இளங்கலை பட்ட படிப்புகளுக்கு ₹50 எனவும், முதுநிலை பட்ட படிப்புகளுக்கு ₹60 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பம் வரும் மே 10ம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.