அரியலூர்,ஏப்.23: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் ஒன்றானதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததுமான ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இறைவன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி உயிர் துறந்த இந்த வெள்ளி உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி என கடைபிடிக்கப்படுகிறது.இந்த புனித வெள்ளி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கடைபிடிக்கபட்டது.