கொடைக்கானல் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது கார் சுற்றுலா பயணிகள் படுகாயம்

கொடைக்கானல், ஏப்.22: கொடைக்கானல் பழநி சாலையில் கார் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.  ஈரோடு பகுதியில் இருந்து ஜெயராஜ் என்பவர் குடும்பத்தினருடன் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானல்-பழநி மலைச்சாலை வெள்ளை பாறை அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். காயமடைந்த ஜெயராஜ் மற்றும் குடும்பத்தினர்  சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: