தா.பழூர் காவல் நிலையத்தில் ப்ரண்ட்ஸ் போலீசாக 60 இளைஞர்கள் நியமனம்

தா.பழூர், ஏப்.18:  தா.பழூர் காவல் நிலையத்தில் ப்ரண்ட்ஸ் போலீசார் 60 இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி ஆலோசனையின் பேரில் அரியலூர் மாவட்டம்  தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் உள்ளிட்ட போலீசார்  ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பழூர் பகுதியில் உள்ள 50 வாக்குச்சாவடி மையங்களில் தா.பழூர், கார்குடி, சிந்தாமணி, கோடங்குடி, கோடாலிகருப்பூர், உதயதத்தம் உள்ளிட்ட 29 இடங்களில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 60  இளைஞர்களை ப்ரண்ட்ஸ் போலீசாக நியமனம் செய்தனர். மேலும், அவர்களுக்கு கடந்த சில நாட்களாகவே பயிற்சி அளித்து வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி  60 இளைஞர்களுக்கும் டீசர்ட் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பதற்றமான வாக்குசாவடி மையங்களில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தபட உள்ளனர்.

Related Stories: