அலட்சியம்துறையூர், ஏப்.18: துறையூர் அருகே பாலகிருஷ்ணம்பட்டியில் உலா வரும் 3 கரடிகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் எல்லையை காரணமாக கூறி வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலகிருஷ்ணம்பட்டி. இங்கு அய்யாற்று கரை அருகே உள்ள விவசாயி செழியன் என்பவர் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதை கண்ட விவசாயி, பெரிய காலடி தடங்கள் இருப்பதைக்கண்டு அந்த கால் தடங்கள் வழியே நடந்து சென்றார். அந்த கால் தடங்கள அய்யாறுக்கு சென்றபோது ஆற்றிற்குள் சுமார் 3 அடி உயரத்தில் 2 கரடிகளும், ஒரு குட்டி கரடியும் இருந்துள்ளது இதை கண்ட செழியன் அதிர்ச்சியடைந்தார். அந்த கரடிகளை பார்த்ததும் செழியன் அங்கிருந்து தப்பித்து ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆற்றோரம் உள்ள வயலில் வேலை செய்த பெண்களை அங்கு இருந்து வெளியே வர செய்தனர். பின்பு ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கரடியை அந்த பகுதியில் இருந்து துரத்தியுள்ளனர்.