நாமக்கல், ஏப்.17: நாமக்கல் தொகுதியின் முன்னேற்றத்திற்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படுவேன் என்று கொமதேக வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் நேற்று நாமக்கல் நகரில் உள்ள 39 வார்டுகளிலும் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிரமாக வாக்குசேகரித்தார். நேற்று மாலை வேட்பாளர் சின்ராஜ் தனது இறுதிகட்ட பிரசாரத்தை பூங்காரோட்டில் நிறைவு செய்தார். அப்போது நடந்து சென்று மக்களிடம் வாக்குசேகரித்தார். அவர் பேசியது: கடந்த 25 நாட்களுக்கு மேலாக தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ளேன். யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சமாக பெறமாட்டேன். இந்த தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்.