அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி

சேலம், செப்.21: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் முன்னிலை வகித்தார். ஆத்தூர் ரூரல் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமை வைத்து, போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, ஆசிரியர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  இதில் பெண்களுக்கான 1500மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன பொது மேலாளரும், டிஆர்ஓவுமான கீதா பிரியா முதலிடம் பிடித்தார். 21ம் தேதி (இன்று) பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான ஜூடோ, குத்துச்சண்டை போட்டியும், நாளை பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான ஜூடோ, குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: