உத்திரமேரூர், ஏப்.17: காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லியங்கரணை, பருத்திக்கொல்லை, பட்டஞ்சேரி, நீரடி, வேட்பாளையம், காக்கநல்லூர், ஆணைப்பள்ளம், சோமநாதபுரம் மற்றும் உத்திரமேரூரில் உள்ள பல பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். கடைசியாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் வியாபாரிகளிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு ேசகரித்து பிரசாரத்தை முடித்து கொண்டார்.