திருப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 பேர் கைது

திருப்பூர், ஏப்.16: திருப்பூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகரில் சட்டவிேராதமாக மது விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, மாஸ்கோ நகர், பாரதி நகர், காமராஜர் ரோடு, புதூர் பிரிவு, பாளையக்காடு, பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிஜூ (34), முத்துலட்சுமி (42), செந்தில்குமார் (35), சூர்யா (21), கருப்பையா (52), திருநாவுக்கரசு (36), லட்சுமணன் (37) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 122 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், 60 அடி ரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஆனந்தபாபு (24), வெள்ளியங்காடு மற்றும் பாளையக்காட்டில் லாட்டரி விற்பனை செய்த கார்த்திக் (21), ஹரிகிருஷ்ணன் (23), கே.வி.ஆர்.நகர், காலேஜ் ரோடு ஆகிய இடங்களில் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட சிவகுமார் (27), நடராஜ் (34) உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: