பழநியில் ஆசிரியர் பயிற்சி பட்டறை

பழநி, ஏப்.16: பழநியில் நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சார்பில் 3 நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறை நடந்தது. சங்க அறக்கட்டளை தலைவர் துளசிதரன் தலைமை வகித்தார். இதில் பழநி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் வளர் இளம் பருவ குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கற்றுத்தரும் விதம், வாழ்வியல் திறன்கள், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துஉரைக்கப்பட்டது.

Related Stories: