கந்தர்வகோட்டை, ஏப்.12: கந்தர்வகோட்டையில் எந்தவித அடையாள அட்டையும் இல்லை என புகார் மனு கொடுத்தவருக்கு முகவரியோடு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த ராசு மகன் முனியாண்டி (60). இவருக்கு எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாததால் கடந்த தேர்தல் வரை ஒருவருக்குகூட வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில் மறுபடியும் சிலதினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுப்பெட்டி முன் அழுதபடி மீண்டும் கோரிக்கை மனு போட்டிருந்தார். இந்த செய்தியும் தினகரன் நாளிதழில் வெளியானது.