ஒதிருவண்ணாமலை, ஏப்.12: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசாத கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரசாத கடையில் நேற்று, மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணி, சந்திரமோகன், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்தனர். முன்னதாக, பிரசாதம் தயார் செய்யும் மடப்பள்ளியில் சோதனை நடத்தினர். அப்போது, பிரசாதம் தயார் செய்யும் இடம் சுத்தமாக உள்ளதா? தரமானதாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, கிரிவலப்பாதையில் உள்ள அன்னதான கூடங்கள், சத்திரங்களில் சோதனை நடத்தினர்.