பெரம்பலூர்,ஏப்.11: பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் கிராமங்களில் மூன்று மணி நேரம் மட்டுமே இயங்கிய டீ கடைகள் தற்போது 12 மணிநேரம் இயங்குவதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் கிரமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிகப்படியான வாக்காளர்கள் கிராமபகுதியில் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் கிராமத்தை நோகி தங்களது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.இதனால் கிராமங்களில் டீ, காபி அமோகமாக விற்பனையாகிறது. அதிக அளவில். குறிப்பாக கிராமங்களில் சின்ன சின்ன டீ கடைகள் இயங்கும். இந்த கடைகளில் காலை 5 மணி முதல் 7 மணி வரை இயங்கும். அதன் பிறகு இந்த கடைகளுக்கு யாரும் வரமாட்டார்கள். இதனால் இந்த கடைகள் பகல் நேரத்தில் வெறிச்சோடி கிடக்கும்.
இந்நிலையில் தற்போது வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் கிராமங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக தேர்வு செய்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.