திண்டுக்கல், ஏப். 11: திண்டுக்கல் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, கள்ளிமந்தையம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதி மக்களின் உயிர்நாடியே விவசாயம்தான். கேரள மாநிலத்தின் 90 சதவீதம் காய்கறிகளை இப்பகுதி விவசாயிகள்தான் தருகின்றனர். ஆனால் விளைந்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும் காய்கறிகளை பதப்படுத்தி வைக்க முடியாமல் கிடைத்த விலைக்க அன்றே விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்தை போக்க விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், குளிர்பதன கிட்டங்கி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தின் குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் பரப்பலாறு அணை 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதே. இதனால் குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்குகின்றனர்.