ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தம்

ஆலந்தூர் ஏப். 11:  பெரும்புதூர் மக்களவை தொகுதியில் பெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரும்புத்தூர் மக்களவை தொகுதியில் 20,84,231 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,42,891 ஆண் வாக்காளர்களும்,  10,41,94 பெண் வாக்காளர்களும், 246 பேர் மற்றவர்களும் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில்  திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர்  வைத்திலிங்கம்,  அமமுக வேட்பாளர்  தாம்பரம் நாராயணன், மக்கள் நீதி மய்யம் சார்பாக தர் மற்றும் சுயேச்சைகள்  உள்பட 19 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்களின்  இறுதிப்பட்டியல் தயாரான நிலையில், பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணி ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.இதில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும்  அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Related Stories: