அரியலூர்,ஏப்.10: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் 2019-க்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும். பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் விஜயலட்சுமி, பார்வையிட்டார். இதில் கலெக்டர் தெரிவித்ததாவது,மக்களவைபொதுத் தேர்தல் - 2019 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணி நடைபெறுகிறது.