மதுரை, ஏப்.10: மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், புதிய பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அமைச்சர் செல்லூர்ராஜூ உடனிருந்தார். இதுகுறித்து வேட்பாளர் ராஜ்சத்யன் கூறும்போது, ‘‘எங்களது தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதி மக்கள் என்னை தொடர்பு கொள்ள ‘டைரக்ட் லைன் டூ எம்பி’ என்ற பிரத்யேக எண் உருவாக்கப்படும் என கூறியிருந்தோம்.
அதன்படி உருவாக்கப்பட்டுள்ள ‘93603 75788’ என்ற வாட்ஸ் அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம். ‘என் மதுரைக்கு என்ன செய்வீங்க? கேளுங்கள் என்னிடம்’ என்ற தலைப்பில் செயல்படும் வாட்ஸ்அப் மூலம் மதுரை பாராளுமன்ற தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் தேவைகள், கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்கலாம்.