பாடாலூர், ஏப். 9: ஆலத்தூர் தாலுகா பகுதியில் விவசாய பொருட்கள் தொடர்பான தொழிற்சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்தார். ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களான மருதடி, விஜயகோபாலபுரம் நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், இரூர், திருவிளக்குறிச்சி, நாட்டார்மங்கலம், கூத்தனூர், மாவிலங்கை, குரூர், டி.களத்தூர், நக்கசேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரம்பலூர் மக்களவை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம், பெரம்பலூர் மாவட்டத்தின் கனவு திட்டமான ரயில் பாதை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.