வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சுவரில் சின்னம் வரைந்த அமமுக பிரமுகர் மீது வழக்கு

தஞ்சை, ஏப். 9: தஞ்சையில் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சுவரில் சின்னம் வரைந்த அமமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜராஜன் நகரில் தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் வீட்டின் சுவற்றில் அமமுகவினர் தங்களது சின்னத்தை வரைந்துள்ளதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது வீட்டின் சுவற்றில் அமமுகவினர் சின்னம் வரையப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமமுக நிர்வாகி சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: