ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி

ஈத்தாமொழி, ஏப். 9: ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி கீழூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(65). தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.  இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் வீட்டருகே நின்றுள்ளார். அப்போது குடிநீருக்கான மின்மோட்டார் இணைக்கப்பட்டுள்ள கம்பத்தில் கை வைத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: