ஊட்டி, ஏப். 8: ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் படுகர் இன மக்களின் சார்பில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் தேர் பவனி இன்று (8ம் தேதி) நடக்கிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின் போது, ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி விழாக்களை நடத்துவர். ஒவ்வொரு நாளும் பல்வேறு அங்காலரங்களில் அம்மன் திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.