கரூர், ஏப். 5: ராணி மங்கம்மாள் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் பாதாள சாக்கடை குழியில் நேற்று திடீர் பள்ளம் விழுந்தது. ஏற்கனவே குறுகிய சாலையாக இருப்பதால் பழைய கோர்ட்டு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த சாலை முக்கியமான போக்குவரத்து மிகுந்தசாலை. வாங்கல், நெரூர் போன்ற கிராமங்களுக்கும், பசுபதிபாளையம் மற்றும் பிற ஊர்களுக்கும் அனைத்து வாகனங்களும் சென்றுவரும் சாலையாக இருக்கிறது. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன, பள்ளம் விழுந்த இடத்தின் அருகில் ஏற்கனவே மெகா பள்ளம் ஏற்பட்டு அதனை சரி செய்வதற்கு 6 மாதங்கள் ஆனது. 6 மாதத்திற்கு பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் இந்த சாலையில் போக்குவரத்து நடைபெற்றது. அதற்குள் மீண்டும் சாலையில் திடீர் பள்ளம் விழுந்துள்ளது. நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கின் காரணமாகவே இது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.