கரூர், ஏப். 4: கரூர் மாவட்டம் நெரூர், மின்னாம்பள்ளி சந்திப்பு பகுதியில் விபத்தினை தடுக்கும் வகையில் மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து சந்தனகாளிபாளையம் வழியாக நெரூர், மின்னாம்பள்ளி, சோமூர், கோயம்பள்ளி, திருமுக்கூடலு£ர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. கரூரில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும், இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் நோக்கியும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. மேலும், மினி பஸ் மற்றும் பேருந்துகளும் இந்த சாலையின் வழியாக அதிகளவு சென்று வருகிறது. சந்தனகாளிபாளையம் பகுதியை தாண்டியதும் மின்னாம்பள்ளிக்கு செல்லும் சாலை பிரிகிறது. மூன்று வழிப்போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.