ஜெயங்கொண்டம், ஏப். 3: ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி காவல்துறை, பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பதாகைகளை இருசக்கர வாகனத்தில் பொருத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து கங்கைகொண்டசோழபுரத்தில் துவங்கி இளையபெருமாள்நல்லூர் தேர்வடம் வழியாக மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்குரோட்டில் பேரணி நிறைவடைந்தது.