கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி சடலம்

தா.பழூர், ஏப். 3: தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி சடலம் மிதந்தது. தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றில் இடையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில்  கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் புகார் செய்தார். தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா வழக்குப்பதிந்து மூதாட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார், எந்த ஊர், இங்கு வந்து எப்படி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்.

Related Stories: