மணப்பாறை, மார்ச் 29: வையம்பட்டி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை மீட்ட போலீசார் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த குமாரவாடி ஊராட்சி ஆனாங்கரைப்பட்டியை சேர்ந்தவர் செம்பன். இவரது மகன் பொன்னுசாமி(22). இவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கோயில் அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த பொன்னுசாமி உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு உடலை காட்டும்படி கூறினர். பின்னர் உடலை காட்டியதும் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இறந்துபோன பொன்னுசாமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.