ஜல்லிகள் பரப்பி பல நாட்களாகியும் ஆவணம் பெரியநாயகிபுரம்- நெடுவாசல் சாலை அமைக்காததால் மக்கள் அவதி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பேராவூரணி, மார்ச் 29: பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம்- நெடுவாசல்  சாலையை சீரமைப்பதற்காக ஜல்லிகள் பரப்பி பல நாட்களாகியும் பணிகள் நடக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ேபராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரம்- நெடுவாசல் சாலையில் தினம்தோறும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் சாலையை சீரமைப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மாதங்களுக்கு முன் பழைய சாலையின் மேல் கப்பி போட்டு பரப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகு எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் நெடுவாசலில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், விவசாய வேலைகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலும் தினம்தோறும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே சாலை அமைக்கும் பணியை விரைவில் துவங்கி முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: