தஞ்சை, மார்ச் 28: சுட்டெரிக்கும் வெயிலால் தஞ்சை சாலையோர பூங்காக்களில் புல், செடிகள் காய்ந்து சருகாகி வருகிறது. எனவே போதுமான தண்ணீர் பாய்ச்சி புல், செடிகளை காப்பாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை துவக்கிவிட்டன. தஞ்சை நகரில் திமுக, அதிமுக ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் மாநகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. காலை, மாலை இருவேளைகளிலும் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் கட்சியினர் புடைசூழ செல்கின்றனர். மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் ஓய்வு எடுத்து கொள்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக தஞ்சையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. நேற்று 99 டிகிரி வெயில் பதிவானது. தினமும் காலை 11 மணிக்கே வெயிலின் தாக்கம் தெரிய துவங்கி விடுகிறது. மாலை 5 மணி வரை இது தொடர்கிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடுகிறது.