தரகம்பட்டி ஊராட்சி பள்ளியில் கல்விசீர் வழங்கல், ஆண்டுவிழா

கடவூர், மார்ச் 28:   தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.  முன்னாள் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஊர் நாட்டாமை பெரியசாமி, முன்னாள் தலைவர் மாணிக்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜராஜன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான சேர், மின்விசிறி, பீரோ, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு கல்விச்சீராக வழங்கினர். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ப கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் முத்துகுமாரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்குமார், தலைமை ஆசிரியர்கள் முனியப்பன், பொன்னுச்சாமி, பெற்றோர் சங்க தலைவர் ராஜசேகர், கவுரவத் தலைவர் மருதை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories: