காங்கயம்,மார்ச்28: சென்னிமலை மற்றும் காங்கயத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 6.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கயம் அருகே தாராபுரம் ரோட்டில் உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து பழனி நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வாகனத்தை ஓட்டி சென்ற கோபிநாத் (26) என்பவரிடமிருந்து ரூ .1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் பிடிபட்டது.முறையான ஆவணம் இல்லாமல் இந்த தொகை கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பிடிபட்ட பணத்தை பறிமுதல் செய்தனர் பின்னர் அந்த தொகை.காங்கேயம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.சென்னிமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 4லட்சத்து 59ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.