ஊத்துக்கோட்டை, மார்ச் 28: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் பல்வேறு வகையில் பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எந்த வித விழிப்புணர்வு பிரசாரமும் நடைபெறவில்லை என நேற்றைய ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.