செம்பனார்கோவில், மார்ச் 27: செம்பனார்கோவில் அருகே நடுக்கரை மேலப்பாதி பாலத்தை சீரமைக்க வேண்டும் என 13 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் இருந்து மேலப்பாதி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு சிமெண்ட் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1955ம் ஆண்டு கட்டப்பட்டது. மேலப்பாதி, மருதூர், கருவாழைக்கரை, மேலையூர், கஞ்சாநகரம், கீழிருப்பு, மணக்குடி, ஆலவெளி, சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, நத்தம், எருமல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட பாலத்தின் வழியாகதான் செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், போலீஸ் நிலையம், உதவி கல்வி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், இந்திய உணவு கழகம், ஒழுங்கற்ற விற்பனைக்கூடம், வேளாண்மை அலுவலகம், வன விரிவாக்க அலுலகம், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சென்று வருகின்றனர்.