உடுமலை, மார்ச் 26: வருவாய்த்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் உடுமலை பகுதியில் மணல் கொள்ளை மும்முரமாக நடக்கிறது.
உடுமலையில் அமராவதி ஆற்றுப்படுகையிலும், பாலாறு, நல்லாறு படுகையிலும் மணல் திருட்டு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை பிடிக்கின்றனர். அமராவதி ஆற்று மணலை அள்ளி, தோட்டங்களில் குவித்து வைத்து ஒரு பை மணல் 75 ரூபாய்க்கு விற்கின்றனர். ஆண்டியூர், தேவனூர்புதூர் பகுதியில் பாலாறு, நல்லாறு, நவ்வாலோடை, சின்னப்பம்பாளையம் பகுதியில் தினசரி லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மக்களவை தேர்தலையொட்டி, வருவாய்த்துறையினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.