ஊத்துக்கோட்டை, மார்ச் 26: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் வருவாய்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசார உக்திகளை கையாண்டு வருகிறது.இந்நிலையில் ஊத்துக்கோட்டை வருவாய்துறை சார்பில் கன்னிகைபேர் கிராமத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.