வேலூர், மார்ச் 26: காட்பாடி-கார்ணாம்பட்டு அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானது தெரிய வந்தது. இறந்தவரின் வலது பக்க கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்த தழும்பு காணப்பட்டது.