தேனி. மார்ச் 22 : தேனி எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக பெரியகுளம் வேட்பாளர் முருகன் கலந்து கொள்ளாது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் நேற்று முன்தினம் நடந்தது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசினர். கூட்டத்தில் தேனி எம்.பி தொகுதி வேட்பாளர் ஓ.ப.ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் அறிமுக படுத்தப்பட்டனர். இக்கூட்டத்திற்காக அதிமுக. சார்பில் நகர ஒன்றிய, பேரூர், கிளைக் கழகம் மூலமாக நபர் ஒருவருக்கு ரூ.300 கொடுத்து கூலிக்கு ஆண்கள் 1 பெண்களை கூட்டி வந்து மேடை முன்பு அமர்த்தி இருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சொல்லி கூட்டி வந்த நேரம் முடிந்து விட்டதாக அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளர் தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து கலைந்தனர். இதனை பார்த்த மாவட்ட செயலாளர் சையது கான் ஓபன் மைக்கிலேயே, அதிமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் 14 ேபரும் கூட்டத்திற்கு நடுவே சென்று அழைத்து வந்த கூட்டம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துங்கள். வந்திருக்கும் அனைவருக்கும் மேடைக்கு பின்னால் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.