கல்லூரி மாணவியிடம் 6 பவுன் செயின் பறிப்பு

திருவெறும்பூர், மார்ச் 22: திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் நல்லேந்திரன். இவரது மனைவி சிந்துஜா(22). இவர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிந்துஜா பஸ்சில் ஏறி மாத்தூர் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது  அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிந்துஜா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து சிந்துஜா நவல்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து செயின் பறித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: