கூடுவாஞ்சேரி, மார்ச் 22: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி சக்கரவர்த்தி நகரை சேர்ந்தவர் எடிசன். இவரது மனைவி காயத்திரி (19). இவர்களுக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த காயத்திரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, காயத்திரி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து கணவர் எடிசனிடம் விசாரிக்கின்றனர். திருமணாகி ஒரே ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால், செங்கல்பட்டு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.