திருக்கல்யாண உற்சவம்

செந்துறை, மார்ச் 22: பங்குனி உத்திரத்தையொட்டி செந்துறை பாலசுப்ரமணியர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செந்துறை நெய்வனத்தில் உள்ள செல்வசுப்பிரணியர் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் உஞ்சினி முருகபெருமானுக்கு காவடி எடுத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: