பூந்தமல்லி, மார்ச் 22: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு எம்ஜிநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதாக இருந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் கடையை திறந்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்புகள் மிகுந்த இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
ஆனால் எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் கேட்க தயாராக இல்லை. இந்த கடையால் தினமும் குடித்துவிட்டு குடிமகன்கள் நிர்வாணமாக சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்.