கரூர், மார்ச் 22 கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு தாக்கல் முடியும் வரை தினமும் 50 போலீசார் டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட மெக்கானிக் ஒருவர் குடும்பத்தினருடன் மண்எண்ணெய் கேனுடன் வந்து கலெக்டர் அலுவலக வாயிலில் மண்எண்ணையை குடும்பத்தினர் அனைவர் மீதும் ஊற்றி தீவைக்க முயன்றார்.