சிப்காட், மார்ச் 22: மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ நிகழ்வு நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மேல்பாடி பொன்னையாற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தபஸ்கிருதம்மாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் எதிரே தென்பகுதியில் 200 அடி தொலைவில் அவரது பாட்டனார் ஆரூர் துஞ்சியதேவனின் கல்லறை உள்ளது. கிமு 1014ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணமடைந்த ஆரூர் துஞ்சியதேவனுக்காக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கல்லறை மீது அரிஞ்சிகை ஈஸ்வரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.